நாளை (16-05-2011) முதலவராக பதவியேற்கிறார் ஜெயலலிதா
சென்னையில் ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலாவை அ.இ.அ.தி.மு.க பொதுச் செயலர் ஜெயலலிதா இன்று சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.
அப்போது, அ.இ.அ.தி.மு.க எம்எல்ஏ கூட்டத்தின் தீர்மான கடிதத்தையும் ஆளுநரிடம் ஜெயலலிதா கொடுத்தார்.
ஆளுநரின் அழைப்பை ஏற்ற நாளை ஜெயலலிதா முதலமைச்சராக பதவி ஏற்கிறார்.
சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் நாளை பதவி ஏற்பு விழா நடைபெறுகிறது.
இந்நிலையில் தமிழக முதல்வராக நாளை பதவியேற்க உள்ள அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதாவை தேநீர் விருந்துக்காக தில்லி வருமாறு காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா அழைப்பு விடுத்துள்ளார். மேலும் தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியைத் தழுவியது குறித்து அக்கட்சியின் தமிழக மூத்த தலைவர்களிடம் கட்சி மேலிடம் விளக்கம் கேட்டுள்ளதாகத் தெரிகிறது.
புதிய சட்டமன்றத்தின் எதிர்கட்சித் தலைவராகிறார் விஜயகாந்த், பொறுப்புடன் செயல்படுவோம் என உறுதியளித்ததோடு மட்டுமில்லாமல் கட்சி எம் எல் ஏக்களையும் கேட்டுக்கொண்டுள்ளார்.